search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து
    X
    விபத்து

    வெள்ளமடம் அருகே இன்று விபத்து- 4 பேர் காயம்

    வெள்ளமடம் அருகே இன்று காலை பஸ், கார், மோட்டார் சைக்கிள்கள் மீது மோதிய மின் டெம்போவால் 4 பேர் காயம் அடைந்தனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    ஆரல்வாய்மொழி:

    நாகர்கோவிலில் இருந்து கண்ணன்பதி நோக்கி இன்று காலை அரசு பஸ் ஒன்று சென்றுகொண்டிருந்தது.

    வெள்ளமடம் அருகே உள்ள குமரன்புதூர் விலக்கு பகுதியில் அந்த பஸ் சாலையில் திரும்பியபோது சென்னையில் இருந்து களியக்காவிளை நோக்கி மீன் பாரம் ஏற்றிச் சென்ற மினி டெம்போ வேகமாக வந்தது. அந்த மினி டெம்போ அரசு பஸ்சின் பக்கவாட்டில் மோதியது.

    மேலும் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடியது. இதனால் அந்த வழியாக வந்த 2 கார்கள், 2 மோட்டார் சைக்கிள்கள் மீதும் அந்த மினி டெம்போ மோதியது. இன்று காலை 10 மணி அளவில் மக்கள் நட மாட்டம் உள்ள பகுதியில் இந்த விபத்து நடந்ததால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த டெல்லியை சேர்ந்த சவ்ரப் அகர்வால் (வயது 28), ஊட்டியை சேர்ந்த சந்தோஷ் ஆகியோர் காயமடைந்தனர். அதே போல் காரில் வந்த விஜி பாலகிருஷ்ணன், சிபு ஆகியோருக்கும் காயம் ஏற்பட்டது.

    மேலும் அந்த பகுதியில் போக்குவரத்து நெருக்கடியும் உருவானது. இந்த விபத்து பற்றிய தகவல் கிடைத்ததும் ஆரல்வாய்மொழி போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×