என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திண்டுக்கல் அருகே தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் கைது
Byமாலை மலர்15 Aug 2019 9:11 AM GMT (Updated: 15 Aug 2019 9:11 AM GMT)
திண்டுக்கல் அருகே தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட 2 வாலிபர்களை கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து மோட்டார் சைக்கிள் மற்றும் 16 பவுன் தங்கச்சங்கிலியை பறிமுதல் செய்தனர்.
குள்ளனம்பட்டி:
திண்டுக்கல் புறநகர் பகுதிகளில் தொடர்ச்சியாக செயின் பறிப்பு மற்றும் வழிப்பறி சம்பவங்கள் நடைபெற்று வந்தது. இதனை கண்டறியும் பொருட்டு போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல் உத்தரவின் பேரில் ரூரல் போலீஸ் துணை சூப்பிரண்டு வினோத் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு செயின் பறிப்பு மற்றும் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடிவந்தனர்.
இந்த நிலையில் நேற்று திண்டுக்கல் வத்தலகுண்டு பைபாஸ் சாலையில் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் தெய்வம், சப்இன்ஸ்பெக்டர்கள் இளஞ்செழியன், அழகுபாண்டி ஆகியோர் தலைமையில் வாகன சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்களை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் பழனி அருகே உள்ள குபேர பட்டினத்தைச் சேர்ந்த முகமது லத்தீப் (வயது 22) திண்டுக்கல் பேகம்பூரை சேர்ந்த முகமது அலி ஜின்னா (24) என்பது தெரியவந்தது.
மேலும் இவர்கள் தொடர்ச்சியாக செயின் பறிப்பு மற்றும் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதனை அடுத்து முகமது லத்தீப், முகமது அலி ஜின்னா ஆகிய 2 பேரையும் தாலுகா போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து மோட்டார் சைக்கிள் மற்றும் 16 பவுன் தங்கச் சங்கிலியையும் பறிமுதல் செய்தனர்.
திண்டுக்கல் புறநகர் பகுதிகளில் தொடர்ச்சியாக செயின் பறிப்பு மற்றும் வழிப்பறி சம்பவங்கள் நடைபெற்று வந்தது. இதனை கண்டறியும் பொருட்டு போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல் உத்தரவின் பேரில் ரூரல் போலீஸ் துணை சூப்பிரண்டு வினோத் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு செயின் பறிப்பு மற்றும் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடிவந்தனர்.
இந்த நிலையில் நேற்று திண்டுக்கல் வத்தலகுண்டு பைபாஸ் சாலையில் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் தெய்வம், சப்இன்ஸ்பெக்டர்கள் இளஞ்செழியன், அழகுபாண்டி ஆகியோர் தலைமையில் வாகன சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்களை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் பழனி அருகே உள்ள குபேர பட்டினத்தைச் சேர்ந்த முகமது லத்தீப் (வயது 22) திண்டுக்கல் பேகம்பூரை சேர்ந்த முகமது அலி ஜின்னா (24) என்பது தெரியவந்தது.
மேலும் இவர்கள் தொடர்ச்சியாக செயின் பறிப்பு மற்றும் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதனை அடுத்து முகமது லத்தீப், முகமது அலி ஜின்னா ஆகிய 2 பேரையும் தாலுகா போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து மோட்டார் சைக்கிள் மற்றும் 16 பவுன் தங்கச் சங்கிலியையும் பறிமுதல் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X