என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சமயபுரம் விடுதிகளில் விபசாரம்- கைதான மேலாளர்கள் உள்பட 4பேர் சிறையில் அடைப்பு
Byமாலை மலர்15 Aug 2019 6:07 AM GMT (Updated: 15 Aug 2019 6:07 AM GMT)
சமயபுரத்தில் உள்ள தங்கும் விடுதிகளில் நடைபெற்று வரும் விபசாரம் தொடர்பாக கைதான மேலாளர்கள் உள்பட 4 பேர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
திருச்சி:
திருச்சி சமயபுரத்தில் உள்ள தங்கும் விடுதிகளில் விபசாரம் நடைபெற்று வருவதாக போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன. இதைத்தொடர்ந்து லால்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜசேகர் மேற்பார்வையில் போலீசார் சமயபுரத்தில் உள்ள தங்கும் விடுதிகளில் அதிரடியாக சோதனை நடத்தினர்.
அப்போது 2 விடுதிகளில் பெண்களை வைத்து விபசாரம் நடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் புரோக்கராக செயல்பட்டதாக விடுதியின் காவலாளிகள் கருப்பையா (வயது 62), தங்கராஜ் (58) மற்றும் உடந்தையாக இருந்ததாக விடுதி மேலாளர்கள் பொன்னையா (62), ரபீக் அகமது (43) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் அங்கிருந்த 4 பெண்களும் மீட்கப்பட்டனர். இதைத்தொடர்ந்து அனைவரும் திருச்சி ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு எண் 3-ல் ஆஜர்படுத்தப்பட்டனர். பின்னர் கோர்ட்டு உத்தரவின்படி மீட்கப்பட்ட 4 பெண்களும் திருச்சியில் உள்ள அரசு காப்பகத்தில் சேர்க்கப்பட்டனர். விடுதியின் காவலாளிகள் மற்றும் மேலாளர்கள் ஆகிய 4 பேரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
திருச்சி சமயபுரத்தில் உள்ள தங்கும் விடுதிகளில் விபசாரம் நடைபெற்று வருவதாக போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன. இதைத்தொடர்ந்து லால்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜசேகர் மேற்பார்வையில் போலீசார் சமயபுரத்தில் உள்ள தங்கும் விடுதிகளில் அதிரடியாக சோதனை நடத்தினர்.
அப்போது 2 விடுதிகளில் பெண்களை வைத்து விபசாரம் நடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் புரோக்கராக செயல்பட்டதாக விடுதியின் காவலாளிகள் கருப்பையா (வயது 62), தங்கராஜ் (58) மற்றும் உடந்தையாக இருந்ததாக விடுதி மேலாளர்கள் பொன்னையா (62), ரபீக் அகமது (43) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் அங்கிருந்த 4 பெண்களும் மீட்கப்பட்டனர். இதைத்தொடர்ந்து அனைவரும் திருச்சி ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு எண் 3-ல் ஆஜர்படுத்தப்பட்டனர். பின்னர் கோர்ட்டு உத்தரவின்படி மீட்கப்பட்ட 4 பெண்களும் திருச்சியில் உள்ள அரசு காப்பகத்தில் சேர்க்கப்பட்டனர். விடுதியின் காவலாளிகள் மற்றும் மேலாளர்கள் ஆகிய 4 பேரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X