என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தர்மபுரியில் பயிற்சி டாக்டர்கள் தர்ணா போராட்டம்
Byமாலை மலர்14 Aug 2019 12:55 PM GMT (Updated: 14 Aug 2019 12:55 PM GMT)
தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி டாக்டர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தர்மபுரி:
மத்திய அரசு இந்திய மருத்துவ ஆணையத்தை கலைத்துவிட்டு தேசிய மருத்துவ ஆணையம் அமைப்பதற்கான மசோதாவை நிறைவேற்றி உள்ளது. இதனை கண்டித்து நாடு முழுவதும் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் இன்று தேசிய மருத்துவ ஆணையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 75-க்கும் மேற்பட்ட பயிற்சி டாக்டர்கள் திடீரென்று வளாகத்திற்குள் திரண்டு வந்து தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் தேசிய மருத்துவ ஆணையம் அமைக்க மசோதாவை நிறைவேற்றிய மத்திய அரசை கண்டித்து பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.
இதைத்தொடர்ந்து அந்த பயிற்சி டாக்டர்கள் அரசு மருத்துவமனை வளாகத்தை சுற்றி பேரணியாக வந்தனர். பயிற்சி டாக்டர்கள் திடீரென்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் ஆஸ்பத்திரி வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X