search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    புதுவை அருகே கார் திருடன் கைது

    புதுவை அருகே கார் திருடனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புதுச்சேரி:

    புதுவை குயவர்பாளையம், லெனின் வீதியை சேர்ந்த கோவிந்தசாமியின் மகன் வரதன் (வயது 54) அண்ணாசாலை முத்து மாரியம்மன் கோவில் வீதியில் சொந்தமாக ஆட்டோ கன்சல்டிவ் நிறுவனம் நடத்தி வருகிறார்.

    கடந்த ஜூன் 27-ந் தேதி இரவு தனது வாகன ஆலோசனை மையத்தில் தனது வெள்ளை நிற மாருதி கரை நிறுத்திவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். மறுநாள் வந்து பார்த்தபோது காரை காணவில்லை.

    இதுகுறித்து அவர் பெரியக்கடை போலீசில் புகார் அளித்தார். போலீஸ் சூப்பிரண்டு மாறன் உத்தரவின்பேரில், இன்ஸ்பெக்டர் செந்தில் குமார், சப்-இன்ஸ்பெக்டர் முருகன் உள்ளிட்ட போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இதனிடையே, கடலூர் மாவட்டம், பண்ருட்டி போலீசார் கடந்த ஜூலை 20-ந்தேதி வாகன சோதனை மேற்கொண்டபோது சந்தேகப்படும்படியாக காரை ஓட்டி வந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர்.

    அவரிடம் காருக்கு உரிய ஆவணங்கள் இல்லை. இதனையடுத்து அவரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்திய போது அவர் விழுப்புரம் ஜே.ஜே. நகரை சேர்ந்த மணிகண்டன் (20) என்பதும், வரதனிடம் திருடிய கார் என்பதும் தெரியவந்தது.

    இதனையடுத்து அவர்கள் புதுவை பெரியக் கடைபோலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து பெரியக் கடை போலீசார் நீதிமன்ற அனுமதியுடன் மணிகண்டனை காவலில் எடுத்து விசாரணை நடத்தினர்.

    இதனையடுத்து அவரிடம் இருந்த கார் பறிமுதல் செய்யப்பட்டது, மேலும் புதுவையில் பல்வேறு இடங்களில் மேலும் 3 கார்களை அவர் திருடியதும் தெரியவந்தது. கைது செய்யப்பட்ட மணிகண்டனை போலீசார் நீதினம்றத்தில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×