என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
புதுவை அருகே கார் திருடன் கைது
புதுச்சேரி:
புதுவை குயவர்பாளையம், லெனின் வீதியை சேர்ந்த கோவிந்தசாமியின் மகன் வரதன் (வயது 54) அண்ணாசாலை முத்து மாரியம்மன் கோவில் வீதியில் சொந்தமாக ஆட்டோ கன்சல்டிவ் நிறுவனம் நடத்தி வருகிறார்.
கடந்த ஜூன் 27-ந் தேதி இரவு தனது வாகன ஆலோசனை மையத்தில் தனது வெள்ளை நிற மாருதி கரை நிறுத்திவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். மறுநாள் வந்து பார்த்தபோது காரை காணவில்லை.
இதுகுறித்து அவர் பெரியக்கடை போலீசில் புகார் அளித்தார். போலீஸ் சூப்பிரண்டு மாறன் உத்தரவின்பேரில், இன்ஸ்பெக்டர் செந்தில் குமார், சப்-இன்ஸ்பெக்டர் முருகன் உள்ளிட்ட போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இதனிடையே, கடலூர் மாவட்டம், பண்ருட்டி போலீசார் கடந்த ஜூலை 20-ந்தேதி வாகன சோதனை மேற்கொண்டபோது சந்தேகப்படும்படியாக காரை ஓட்டி வந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர்.
அவரிடம் காருக்கு உரிய ஆவணங்கள் இல்லை. இதனையடுத்து அவரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்திய போது அவர் விழுப்புரம் ஜே.ஜே. நகரை சேர்ந்த மணிகண்டன் (20) என்பதும், வரதனிடம் திருடிய கார் என்பதும் தெரியவந்தது.
இதனையடுத்து அவர்கள் புதுவை பெரியக் கடைபோலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து பெரியக் கடை போலீசார் நீதிமன்ற அனுமதியுடன் மணிகண்டனை காவலில் எடுத்து விசாரணை நடத்தினர்.
இதனையடுத்து அவரிடம் இருந்த கார் பறிமுதல் செய்யப்பட்டது, மேலும் புதுவையில் பல்வேறு இடங்களில் மேலும் 3 கார்களை அவர் திருடியதும் தெரியவந்தது. கைது செய்யப்பட்ட மணிகண்டனை போலீசார் நீதினம்றத்தில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்