search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மரணம்
    X
    மரணம்

    கோவை அருகே தனியார் கம்பெனி ஊழியர் மயங்கி விழுந்து பலி

    கோவை அருகே தனியார் கம்பெனி ஊழியர் மயங்கி விழுந்து பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை:

    கோவை கணபதி அருகே உள்ள ஜெயபிரகாஷ் நகரை சேர்ந்தவர் ஞானசுந்தரம். இவரது மகன் யோவான் (30). இவர் பல்லடத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு இவருக்கு திருமணம் நடந்தது. இந்த நிலையில் இவர் தினசரி குடித்து விட்டு வந்ததால் அவரது மனைவி கணவரை பிரிந்து சென்றுவிட்டார்.

    இதனால் மனவேதனை அடைந்த அவர் சம்பவத்தன்று குடித்து விட்டு வீட்டில் மயங்கி கிடந்தார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் யோவான் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து சரவணம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×