என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
அய்யலூர் அருகே தறிகெட்டு ஓடிய மில் வேன் மோதி வியாபாரி பலி
வடமதுரை:
திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் அருகே உள்ள சுக்காம்பட்டியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 50). மளிகை கடை வைத்துள்ளார். இவரும் அய்யம்பாளையத்தைச் சேர்ந்த மாரியப்பன் (வயது 54) என்பவரும் ஒரே மோட்டார் சைக்கிளில் திருச்சி சாலையில் சென்று கொண்டு இருந்தனர்.
கடவூர் பிரிவு அருகே சென்ற போது எதிரே 30-க்கும் மேற்பட்ட மில் தொழிலாளர்களை ஏற்றிக் கொண்டு வந்த வேன் பழனிச்சாமியின் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட இருவரையும் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பழனிச்சாமி பரிதாபமாக உயிரிழந்தார். மாரியப்பன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.
விபத்து நடந்ததும் வேனில் வந்த பெண்களை நடுரோட்டில் இறக்கி விட்டு டிரைவர் தப்பி ஓடி விட்டார். இது குறித்து தகவல் அறிந்து வடமதுரை போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் தப்பி ஓடிய டிரைவரையும் தேடி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்