என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆறுமுகநேரி அருகே பணம் கேட்டு அரிவாளைகாட்டி மிரட்டல்- வாலிபர் கைது
Byமாலை மலர்13 Aug 2019 4:11 PM GMT (Updated: 13 Aug 2019 4:11 PM GMT)
ஆறுமுகநேரி அருகே மோட்டார் சைக்கிளில் வந்தவரிடம் பணம் கேட்டு அரிவாளைகாட்டி மிரட்டிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
ஆறுமுகநேரி:
ஏரல் டபுள்ரோஸ் காலனியை சேர்ந்தவர் மைக்கேல்ராஜ் மகன் ஜெபஸ்டன் விஜய்(வயது 22). இவர் சம்பவத்தன்று பழையகாயல் அருகே மஞ்சள்நீர் காயல் விலக்கு பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பழையகாயல் காமராஜபுரத்தை சேர்ந்த ஏசுராஜ் மகன் பூரன சுரேஷ்(வயது 38) என்பவர் ஜெபஸ்டனை வழிமறித்து பணம் கேட்டுள்ளார். அவர் கொடுக்க மறுத்ததால் அரிவாளை காட்டி மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இதனை அவ்வழியாக வந்தவர்கள் பார்த்து உதவிக்கு வந்தனர். அவர்களை பார்த்ததும் பூரன சுரேஷ் அங்கிருந்து தப்பி ஓடினார்.
இதுகுறித்து ஆத்தூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி பூரன சுரேஷை கைது செய்தனர். இது தொடர்பாக அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X