search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    பாலக்கோடு அருகே விவசாயி தீக்குளித்து தற்கொலை

    பாலக்கோடு அருகே விவசாயத்தில் போதுமான விளைச்சல் இல்லாததால் மனமுடைந்த விவசாயி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
    தர்மபுரி:

    தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்துள்ள புலிக்கரை அருகே நக்கல்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் இளங்கோவன். இவரது மகன் சின்னசாமி (வயது 30). விவசாயியான இவருக்கு திருமணமாகி வெண்ணிலா என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.

    தற்போது மழை சரியாக பெய்யாததால் விவசாயத்தில் போதுமான விளைச்சல் இல்லை. இதனால் குடும்பத்தின் அன்றாட செலவுக்கு இவரது வருமானம் போதுமானதாக இல்லை. எனவே சின்னசாமிக்கும் அவரது மனைவிக்கும் அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கம். இதனால் மனமுடைந்து காணப்பட்ட சின்னசாமி கடந்த 10-ந் தேதி அவரது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். 

    இவரைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு பெங்களூரு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு உள்ள மருத்துவர்கள் பரிசோதித்துவிட்டு சின்னசாமியின் உடலில் தீக்காயம் அதிகமாக உள்ளது எனவே அவரை காப்பாற்ற முடியாது என தெரிவித்தனர். இதனை தொடர்ந்து மேல்சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு சின்னசாமியை கொண்டு சென்றனர்.

    இதனைத் தொடர்ந்து மருத்துவர்கள் சின்னசாமி பரிசோதித்துவிட்டு இவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தகவல் தெரிவித்தனர். இது குறித்து மதிகோன்பாளையம் போலீசார் வழக்குப்பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×