என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருப்பூரில் 5-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை- தொழிலாளி கைது
Byமாலை மலர்13 Aug 2019 4:25 AM GMT
திருப்பூரில் 5-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சமையல் தொழிலாளியை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
திருப்பூர்:
திருப்பூர் -காங்கயம் ரோடு பகுதியை சேர்ந்த 11 வயது சிறுமி அங்குள்ள பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வருகிறாள்.
அவளை தினமும் அவரது தந்தை பள்ளியில் விட்டு வருவது வழக்கம். நேற்று விடுமுறை என்பதால் சிறுமி வீட்டில் இருந்தாள். அவள் மிகவும் சோர்வாக காணப்பட்டாள்.
இதனை பார்த்த பெற்றோர் அவளிடம் விசாரித்தனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த சமையல் தொழிலாளி வேலாயுதம் (52) என்பவர் தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தெரிவித்தாள். கடந்த ஒரு வாரமாக தொந்தரவு செய்ததாக கூறினாள்.
இதனால் அவளது பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து திருப்பூர் தெற்கு மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து போலீசார் தொழிலாளியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X