search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொலை மிரட்டல்
    X
    கொலை மிரட்டல்

    சாத்தான்குளம் அருகே பெண்ணுக்கு கொலை மிரட்டல்- 4 பேர் மீது வழக்குப்பதிவு

    சாத்தான்குளம் அருகே பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    சாத்தான்குளம்:

    சாத்தான்குளம் அருகே உள்ள கீழக்குளம் தெற்கு தெருவை சேர்ந்தவர் அருணாச்சலம், விவசாயி. இவரது மனைவி பத்திரகாளி(வயது 30). இவர் அப்பகுதியில் உள்ள புறம்போக்கு நிலத்தில் சாணம் கொட்டி வந்துள்ளார். சம்பவத்தன்று சாணம் கொட்டுவதற்கு சென்றுள்ளார். அப்போது அதே பகுதியை சேர்ந்த இளங்காமணி அவரது மகள்கள் முத்து, சந்தியா, உறவினர் பட்டு ஆகியோர் அங்கு வந்தனர்.

    பின்னர் அவர்கள் சாணம் கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தகராறு செய்துள்ளனர். இதனை பத்திரகாளி தட்டி கேட்டதாக தெரிகிறது. அப்போது 4 பேரும் சேர்ந்து அவரை கீழே தள்ளிவிட்டு பலமாக தாக்கியதுடன் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. சத்தம் கேட்டு பத்திரகாளியின் மகள் அங்கு வந்துள்ளார். அவரை பார்த்து அனைவரும் அங்கிருந்து தப்பி ஓடினர்.

    இதுகுறித்து சாத்தான்குளம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் மற்றும் போலீசார் 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×