search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    ஆழ்வார்திருநகரியில் முதியவர் தீக்குளித்து தற்கொலை

    ஆழ்வார்திருநகரியில் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருந்த முதியவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

    தென்திருப்பேரை:

    ஆழ்வார்திருநகரி முகைதீன் தெருவை சேர்ந்தவர் ஆதம்(வயது 93). இவருக்கு மனைவி மற்றும் 3 மகன், ஒரு மகள் உள்ளனர். ஆதமின் மனைவி சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது. மேலும் மகன்கள் அனைவரும் வெளியூரில் வசித்து வருகின்றனர்.

    இந்நிலையில் சர்க்கரை நோயால் ஆதம் பாதிக்கப்பட்டிருந்தார். இதனால் தன்னை கவனிக்க யாரும் இல்லை என மனவருத்தத்தில் இருந்து வந்ததாக தெரிகிறது. இதனால் மனமுடைந்தவர் நேற்று தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

    இதையடுத்து தகவல் அறிந்து வந்த ஆழ்வார் திருநகரி போலீசார் முதியவர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ஆதமின் மகன் சாகுல் அளித்த புகாரின் பேரில் ஆழ்வார்திருநகரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×