என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வாழவச்சனூரில் ரூ.10 லட்சம் மதிப்பிலான கரும்புகள் தீயில் எரிந்து நாசம்
Byமாலை மலர்12 Aug 2019 4:15 PM GMT (Updated: 12 Aug 2019 4:15 PM GMT)
வாழவச்சனூரில் ரூ.10 லட்சம் மதிப்பிலான கரும்புகள் தீயில் எரிந்து நாசமானது.
வாணாபுரம்:
வாணாபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் கரும்பு பயிர் சாகுபடி செய்து உள்ளனர். வாழவச்சனூர் பகுதியை சேர்ந்த விவசாயி சேகர் என்பவர் அந்த பகுதியில் உள்ள தனது 1 ஏக்கர் நிலத்தில் கரும்பு பயிரிட்டு இருந்தார். அவருடைய நிலத்தின் வழியாக செல்லும் உயர் மின்னழுத்த மின்சார வயர்கள் தாழ்வாக செல்கிறது.
இந்த நிலையில் நேற்று மின் வயர்கள் ஒன்றுடன் ஒன்று உரசியதால் தீப்பொறி ஏற்பட்டு உள்ளது. இந்த தீப்பொறி சேகர் நிலத்தில் உள்ள கரும்பு பயிர் மீது விழுந்துள்ளது. இதனால் கரும்பு பயிர்கள் தீப்பிடித்து எரிய தொடங்கியது.
இதனையடுத்து சேகர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தீயை அணைக்க முயன்றார். இருப்பினும் தீ காற்றின் வேகத்தால் அருகில் உள்ள செல்வம், வேலு, ராஜேந்திரன் ஆகியோரின் நிலத்தில் பயிரிட்டு உள்ள கரும்பிலும் தீ பரவியது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருவண்ணாமலை தீயணைப்பு வீரர்கள், வாணாபுரம் போலீசார் மற்றும் பொதுமக்கள் மேலும் தீ பரவாமல் தடுத்து அணைத்தனர்.
இந்த தீ விபத்தில் சுமார் ரூ.10 லட்சம் மதிப்பிலான கரும்புகள் எரிந்து நாசமானது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X