என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தல்லாகுளத்தில் நடந்து சென்ற பெண்ணிடம் 5 பவுன் நகை பறிப்பு
Byமாலை மலர்12 Aug 2019 11:02 AM GMT (Updated: 12 Aug 2019 11:02 AM GMT)
சாலையில் நடந்து சென்ற பெண்ணை தாக்கி 5 பவுன் நகையினை மர்ம நபர் பறித்து சென்றார்.
மதுரை:
மதுரை தல்லாகுளம் பரசுராம்பட்டி அருகே உள்ள சாந்தி நகரைச்சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி ஜெயலட்சுமி (வயது43). இவர் அரசினர் ஐ.டி.ஐ. முன்பாக தனியாக நடந்து சென்றார்.
அப்போது மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த மர்ம நபர் ஜெயலட்சுமியை தாக்கிவிட்டு அவரது கழுத்தில் கிடந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்று விட்டார். இது குறித்து தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதேபோல் வில்லாபுரம் தென்றல் நகரைச் சேர்ந்தவர் அய்யனார் (61). நேற்று இரவு இவர் சாலையில் நடந்து சென்றபோது ஒரு வாலிபர் அவரது கழுத்தில் கிடந்த தங்க செயினை பறித்து விட்டு மின்னல் வேகத்தில் மறைந்து விட்டார்.
இதுகுறித்து அவனியாபுரம் போலீசில் அய்யனார் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X