search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    திருமங்கலத்தில் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த ரவுடி கைது

    திருமங்கலத்தில் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்ததாக பிரபல ரவுடி கைது செய்யப்பட்டான்.
    பேரையூர்:

    மதுரை மாவட்டம் சின்னஉடைப்பு வடக்கு தெருவை சேர்ந்தவர் உலகநாதன். இவரது மகன் பாலச்சந்திரன் (வயது30), பிரபல ரவுடி.

    இவன் மீது அவனியாபுரம், பெருங்குடி, சிலை மான், ஆஸ்டின்பட்டி உள்ளிட்ட பல்வேறு போலீஸ் நிலையங்களில் கொலை, திருட்டு உள்ளிட்ட வழக்குகள் உள்ளன.

    இந்த நிலையில் திருமங்கலத்தை சேர்ந்த சுந்தர்ராஜன், 4 வழிச்சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்தார். அவரை கத்தி முனையில் மிரட்டி பாலச்சந்திரன் பணம் கேட்டுள்ளார்.

    இதுகுறித்து திருமங்கலம் நகர் போலீசில் சுந்தர்ராஜன் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    தொடர்ந்து ரவுடி பாலச்சந்திரனை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.
    Next Story
    ×