என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சுதந்திர தினத்தையொட்டி மதுரை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு
Byமாலை மலர்12 Aug 2019 9:55 AM GMT (Updated: 12 Aug 2019 9:55 AM GMT)
சுதந்திர தினத்தையொட்டி மதுரை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பார்வையாளர்களுக்கு விமான நிலையத்தின் உள்ளே செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
அவனியாபுரம்:
வருகிற 15-ந்தேதி சுதந்திர தினவிழா கொண்டாடப்பட உள்ளது. அதனை முன்னிட்டு அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமான நிலையங்கள், ரெயில் நிலையங்கள், கோவில்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.
அதன் ஒரு பகுதியாக மதுரை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் உள்ளிட்ட பாதுகாப்பு அதிகாரிகள் சோதனையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
விமான நிலையத்திற்கு வரும் வாகனங்களை மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் தீவிர சோதனைக்கு பிறகே அனுமதிக்கின்றனர். பாதுகாப்பு படை வீரர்கள் விமான நிலையம் முழுவதும் வாகனம் மூலம் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் தமிழக காவல் துறையுடன் இணைந்து மோப்ப நாய் உதவியுடன் பயணிகளின் உடமைகளையும் பயணிகளையும் தீவிர சோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.
பார்வையாளர்களுக்கு விமான நிலையத்தின் உள்ளே செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
வருகிற 15-ந்தேதி சுதந்திர தினவிழா கொண்டாடப்பட உள்ளது. அதனை முன்னிட்டு அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமான நிலையங்கள், ரெயில் நிலையங்கள், கோவில்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.
அதன் ஒரு பகுதியாக மதுரை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் உள்ளிட்ட பாதுகாப்பு அதிகாரிகள் சோதனையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
விமான நிலையத்திற்கு வரும் வாகனங்களை மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் தீவிர சோதனைக்கு பிறகே அனுமதிக்கின்றனர். பாதுகாப்பு படை வீரர்கள் விமான நிலையம் முழுவதும் வாகனம் மூலம் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் தமிழக காவல் துறையுடன் இணைந்து மோப்ப நாய் உதவியுடன் பயணிகளின் உடமைகளையும் பயணிகளையும் தீவிர சோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.
பார்வையாளர்களுக்கு விமான நிலையத்தின் உள்ளே செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X