search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து
    X
    விபத்து

    வெம்பாக்கம் அருகே பைக் விபத்தில் தொழிலாளி பலி

    வெம்பாக்கம் அருகே பைக் விபத்தில் பலத்த காயம் அடைந்த தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.

    வெம்பாக்கம்:

    வெம்பாக்கம் அருகே உள்ள திருநாவல்பட்டு பகுதியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (வயது 45). கூலி தொழிலாளி. இவரது மனைவி ராணி. சம்பவத்தன்று ராதாகிருஷ்ணன் வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார்.

    புதூர் தனியார் பள்ளி அருகே சென்ற போது நிலை தடுமாறி பைக்கில் இருந்து கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை மீட்ட அக்கம் பக்கத்தினர் காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு ராதாகிருஷ்ணன் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    இது குறித்து பிரம்மதேசம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×