என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் கல்லூரி மாணவர்களுக்கு இடையே கவிதை, கட்டுரை, பேச்சு போட்டிகள்
Byமாலை மலர்10 Aug 2019 6:22 PM GMT (Updated: 10 Aug 2019 6:22 PM GMT)
தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு இடையே கவிதை, கட்டுரை, பேச்சு போட்டிகள் நடைபெற்றது.
பெரம்பலூர்:
மாணவர்களிடையே பேச்சாற்றலையும், படைப்பாற்றலையும் வளர்க்கும் நோக்கில் பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களை சேர்ந்த அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு தமிழ் வளர்ச்சி துறையின் சார்பில் மாவட்ட அளவிலான கவிதை, கட்டுரை மற்றும் பேச்சு போட்டிகள் நேற்று நடத்தப்பட்டது.
பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு இடையே தனலட்சுமி சீனிவாசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் போட்டிகள் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குனர் சித்ரா தலைமை தாங்கி போட்டியினை தொடங்கி வைத்தார். ‘தொல்நாகரிகம் தமிழர் நாகரிகம்‘ என்கிற தலைப்பில் கட்டுரை போட்டியும், ‘பரவட்டும் பாவேந்தம்‘ என்கிற தலைப்பில் கவிதை போட்டியும், எங்கள் தமிழ், தமிழின் இனிமை, தமிழ்ப்பேறு, மானுடத்தின் வெற்றி, சிந்தனைத் தெளிவு உள்ளிட்ட தமிழ் சார்ந்த 30 தலைப்புகளில் பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்து 100-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். போட்டிகள் மாணவ-மாணவிகளுக்கு தனித்தனியாக நடத்தப்பட்டது.
இதேபோல அரியலூர் மாவட்ட அளவில் கல்லூரி மாணவ-மாணவிகளுக்கான கட்டுரை, கவிதை, பேச்சு போட்டிகள் அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடத்தப்பட்டது. தமிழ் வளர்ச்சித் துறை இயக்குனரகத்தின் உதவியாளர் சாந்தி போட்டிகளை தொடங்கி வைத்தார்.
இதில், ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெறும் மாணவ-மாணவிகளுக்கு முதல் பரிசாக ரூ.10 ஆயிரமும், 2-ம் பரிசாக ரூ.7 ஆயிரமும், 3-ம் பரிசாக ரூ.5 ஆயிரமும், சான்றிதழ்களும் அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் முன்னிலையில் வழங்கப்பட உள்ளது. போட்டிகளில் முதலிடம் பெற்றவர்கள் மட்டும் சென்னையில் நடைபெறும் மாநில அளவிலான போட்டியில் கலந்து கொள்ள உள்ளனர்.
மாணவர்களிடையே பேச்சாற்றலையும், படைப்பாற்றலையும் வளர்க்கும் நோக்கில் பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களை சேர்ந்த அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு தமிழ் வளர்ச்சி துறையின் சார்பில் மாவட்ட அளவிலான கவிதை, கட்டுரை மற்றும் பேச்சு போட்டிகள் நேற்று நடத்தப்பட்டது.
பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு இடையே தனலட்சுமி சீனிவாசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் போட்டிகள் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குனர் சித்ரா தலைமை தாங்கி போட்டியினை தொடங்கி வைத்தார். ‘தொல்நாகரிகம் தமிழர் நாகரிகம்‘ என்கிற தலைப்பில் கட்டுரை போட்டியும், ‘பரவட்டும் பாவேந்தம்‘ என்கிற தலைப்பில் கவிதை போட்டியும், எங்கள் தமிழ், தமிழின் இனிமை, தமிழ்ப்பேறு, மானுடத்தின் வெற்றி, சிந்தனைத் தெளிவு உள்ளிட்ட தமிழ் சார்ந்த 30 தலைப்புகளில் பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்து 100-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். போட்டிகள் மாணவ-மாணவிகளுக்கு தனித்தனியாக நடத்தப்பட்டது.
இதேபோல அரியலூர் மாவட்ட அளவில் கல்லூரி மாணவ-மாணவிகளுக்கான கட்டுரை, கவிதை, பேச்சு போட்டிகள் அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடத்தப்பட்டது. தமிழ் வளர்ச்சித் துறை இயக்குனரகத்தின் உதவியாளர் சாந்தி போட்டிகளை தொடங்கி வைத்தார்.
இதில், ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெறும் மாணவ-மாணவிகளுக்கு முதல் பரிசாக ரூ.10 ஆயிரமும், 2-ம் பரிசாக ரூ.7 ஆயிரமும், 3-ம் பரிசாக ரூ.5 ஆயிரமும், சான்றிதழ்களும் அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் முன்னிலையில் வழங்கப்பட உள்ளது. போட்டிகளில் முதலிடம் பெற்றவர்கள் மட்டும் சென்னையில் நடைபெறும் மாநில அளவிலான போட்டியில் கலந்து கொள்ள உள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X