search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    கோவையில் வாலிபர் தற்கொலை- போலீசார் விசாரணை

    கோவையில் திருப்பூரைச் சேர்ந்த வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கோவை:

    திருப்பூர் மாவட்டம் அவிநாசி வ.ஊ.சி. காலனியை சேர்ந்தவர் முருகன் வயது 34. இவர் கோவை பீளமேடு விளாங்குறிச்சி ரோட்டில் தங்கியிருந்து விபத்துக்குள்ளான வண்டிகளை மீட்கும் டிரக்கில் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.

    சம்பவத்தன்று இவர் தனது உரிமையாளர்களிடம் காது வலிப்பதாக கூறி விட்டு அறைக்கு சென்றார்.

    ஆனால் நீண்ட நேரம் ஆகியும் அவர் திரும்பி வரவில்லை. இதையடுத்து உரிமையாளர் அங்கு சென்று பார்த்தார் அப்போது அறையில் முருகன் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்ட நிலையில் பிணமாக தொங்கிக் கொண்டு இருந்தார்.

    இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் இதுகுறித்து பீளமேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

    உடனடியாக போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தற்கொலை செய்து கொண்ட முருகனின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் முருகன் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×