என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆண்டிப்பட்டி அருகே பஞ்சு குடோனில் தீ விபத்து
Byமாலை மலர்10 Aug 2019 8:51 AM GMT (Updated: 10 Aug 2019 8:51 AM GMT)
ஆண்டிப்பட்டி அருகே இலவம் பஞ்சு, கொட்டை முந்திரி குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
ஆண்டிப்பட்டி:
ஆண்டிப்பட்டி அருகே உள்ள கடமலை மயிலை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வருஷநாடு கிராமத்தில் தனியார் பஞ்சாலை உள்ளது. இந்த ஆலைக்கு சொந்தமான குடோனில் இன்று அதிகாலை திடீரென தீ பிடித்தது.
காற்று பலமாக வீசியதால் தீ மளமளவென பற்றி பரவி எரிந்தது. இதில் இலவம் பஞ்சு, கொட்டை முந்திரி மூடைகள் பல எரிந்து நாசமாயின. இதன் மதிப்பு சுமார் ரூ.35 லட்சம் இருக்கும் என தெரிகிறது. இதுபற்றி ஆலை நிர்வாகம் சார்பாக வருஷநாடு போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது .
இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குடோனில் தீ பிடித்தது எப்படி? வேறு யாரும் தீ வைத்தனரா? என பல கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X