search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    செல்போன்கேட்டு தகராறு: பெண் தீக்குளித்து தற்கொலை

    செல்போன்கேட்டு தகராறில் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூரை அடுத்த போலிவாக்கம் சத்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர் முரளி (24) கூலி தொழிலாளி. இவர் கடந்த 2 வருடத்துக்கு முன்பு யமுனா(20)வை திருமணம் செய்துகொண்டார். 1 வயது பெண் குழந்தை உள்ளது.

    இந்நிலையில் யமுனா செல்போன் கேட்டு தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதில் வாக்குவாதம் முற்றியதால் மனமுடைந்த யமுனா வீட்டில் வைத்திருந்த மண்எண்ணையை ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.

    அருகில் உள்ளவர்கள் அவரை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து மணவாளநகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×