
வேலூர் பாராளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை ராணிப்பேட்டை என்ஜினீயரிங் கல்லூரியில் நடந்தது. இதில் தி.மு.க. வேட்பாளர் கதிர் ஆனந்த் 4,85,340 வாக்குகள் பெற்று அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தைவிட 8,141 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
கதிர் ஆனந்த் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டதும் கதிர் ஆனந்த்தின் தந்தையும், தி.மு.க பொருளாளருமான துரைமுருகன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

வெற்றி குறித்து வேட்பாளர் கதிர் ஆனந்த் கூறுகையில்:-
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினின் உழைப்புக்கு கிடைத்த வெற்றி இது. இந்த வெற்றியை கலைஞருக்கு சமர்ப்பிக்கிறேன் என்று கூறினார்.