என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சென்னைக்கு கிருஷ்ணா நதிநீர் வந்து கொண்டிருக்கிறது - அமைச்சர் வேலுமணி தகவல்
Byமாலை மலர்10 Aug 2019 12:01 AM GMT (Updated: 10 Aug 2019 12:01 AM GMT)
ஆந்திராவில் இருந்து சென்னைக்கு கிருஷ்ணா நதிநீர் திறந்துவிடப்பட்டு வந்து கொண்டு இருக்கிறது என அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார்.
ஆலந்தூர்:
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நிருபர்களிடம் கூறியதாவது:-
ஆந்திராவில் இருந்து சென்னைக்கு வரவேண்டிய கிருஷ்ணா நதிநீரை பெறுவதற்காக தமிழக முதல்-அமைச்சர் உத்தரவின்பேரில் நானும், அமைச்சர் ஜெயக்குமாரும் ஆந்திர முதல்-மந்திரியை சந்திக்க சென்றோம். அவரிடம், தமிழக முதல்-அமைச்சர் அளித்த கடிதத்தை கொடுத்தோம்.
தமிழகத்துக்கு தரவேண்டிய கிருஷ்ணா நீரை வழங்க ஆந்திர முதல்-மந்திரி ஒப்புக்கொண்டார். உடனடியாக தண்ணீரை திறந்துவிட நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டார். இதன் மூலமாக சென்னையில் உள்ள குடிநீர் பற்றாக்குறை வேகமாக தீர்ந்துவிடும்.
ஏற்கனவே 4 டி.எம்.சி. தண்ணீர் தரவேண்டும். தற்போது 4 டி.எம்.சி. வழங்க வேண்டும். மொத்தம் 8 டி.எம்.சி. தண்ணீரை திறந்துவிட்டால் நல்லதுதான். சென்னைக்கு கிருஷ்ணா நதிநீர் திறந்துவிடப்பட்டு வந்து கொண்டு இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆந்திர மாநில முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டியை சந்தித்துவிட்டு தமிழக அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, ஜெயக்குமார் ஆகியோர் விஜயவாடாவில் இருந்து விமானம் மூலம் சென்னை திரும்பி வந்தனர்.
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நிருபர்களிடம் கூறியதாவது:-
ஆந்திராவில் இருந்து சென்னைக்கு வரவேண்டிய கிருஷ்ணா நதிநீரை பெறுவதற்காக தமிழக முதல்-அமைச்சர் உத்தரவின்பேரில் நானும், அமைச்சர் ஜெயக்குமாரும் ஆந்திர முதல்-மந்திரியை சந்திக்க சென்றோம். அவரிடம், தமிழக முதல்-அமைச்சர் அளித்த கடிதத்தை கொடுத்தோம்.
தமிழகத்துக்கு தரவேண்டிய கிருஷ்ணா நீரை வழங்க ஆந்திர முதல்-மந்திரி ஒப்புக்கொண்டார். உடனடியாக தண்ணீரை திறந்துவிட நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டார். இதன் மூலமாக சென்னையில் உள்ள குடிநீர் பற்றாக்குறை வேகமாக தீர்ந்துவிடும்.
ஏற்கனவே 4 டி.எம்.சி. தண்ணீர் தரவேண்டும். தற்போது 4 டி.எம்.சி. வழங்க வேண்டும். மொத்தம் 8 டி.எம்.சி. தண்ணீரை திறந்துவிட்டால் நல்லதுதான். சென்னைக்கு கிருஷ்ணா நதிநீர் திறந்துவிடப்பட்டு வந்து கொண்டு இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X