search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முக ஸ்டாலின்
    X
    முக ஸ்டாலின்

    கதிர் ஆனந்துக்கு கிடைத்துள்ள வெற்றி ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றி - முக ஸ்டாலின்

    வேலூர் தொகுதியில் கதிர் ஆனந்துக்கு கிடைத்துள்ள வெற்றி ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றி என திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    வேலூரில் தி.மு.க. வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றி பெற்றார். இதையடுத்து, சென்னை அண்ணா அறிவாலயத்தில் அண்ணா மற்றும் கருணாநிதி புகைப்படங்களுக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதன்பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. அபார வெற்றி பெற்றுள்ளது, இது ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி. வேலூர் தேர்தல் வெற்றிக்கு துணை நின்ற அனைத்து தரப்பினருக்கும் நன்றி.

    அண்ணா, கருணாநிதி படங்களுக்கு மலர் தூவி மரியாதை

    ஆளும் கட்சியின் அதிகார பலத்தை மீறி வேலூரில் தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது. மத்திய, மாநில அரசுகளின் சூழ்ச்சிகளை முறியடித்து வேலூர் தொகுதி தி.மு.க.வின் கோட்டையாகி இருக்கிறது என தெரிவித்தார்.
    Next Story
    ×