search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    விருதுநகரில் கணவரின் குடிப்பழக்கத்தால் இளம்பெண் தற்கொலை

    விருதுநகரில் கணவரின் குடிப்பழக்கத்தால் மனமுடைந்த இளம்பெண் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    விருதுநகர்:

    விருதுநகர் புல்லக்கோட்டை சாலையை சேர்ந்தவர் முத்து மணிகண்டன். இவரது மனைவி முனீஸ்வரி (வயது 25). இவர்களுக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகின்றன. ஒரு மகன் உள்ளான்.

    பூ வியாபாரம் செய்து வந்த முத்து மணிகண்டன், மது பழக்கத்திற்கு அடிமையானார். அடிக்கடி மது அருந்தியதால், கணவன்- மனைவி இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது.

    இதனால் முனீஸ்வரி மன வேதனையில் இருந்து வந்தார். சம்பவத்தன்றும் கணவர் மது அருந்தி வந்ததால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர், வீட்டில் தூக்கில் தொங்கினார்.

    இதனை கவனித்த அக்கம் பக்கத்தினர் முனீஸ்வரியை மீட்டனர். பின்னர் அவர் விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.

    அங்கு முதலுதவி பெற்றதும் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி முனீஸ்வரி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து விருதுநகர் மேற்கு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×