என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நீலகிரி கனமழையால் பலியானோர் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் நிதி - முதல்வர் பழனிசாமி
Byமாலை மலர்9 Aug 2019 10:39 AM GMT (Updated: 9 Aug 2019 10:39 AM GMT)
நீலகிரியில் பெய்த கனமழையில் சிக்கி பலியானோர் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் நிதி வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
சென்னை:
தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.
கேரளா மற்றும் தமிழகத்தின் நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே, நீலகிரி மாவட்டம், நடுவட்டம் இந்திரா நகரில் கனமழையால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. இதில், அமுதா (34), அவரது மகள் காவ்யா (10) ஆகியோர் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தனர். இதையடுத்து, நீலகிரி மாவட்டத்தில் கனமழைக்கு பலியானோர் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்தது.
இந்நிலையில், நீலகிரியில் கனமழை காரணமாக உயிரிழந்த 5 பேர் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும்.
மீட்புப் பணியில் 66 ராணுவ வீரர்கள் உள்பட 491 பேர் ஈடுபட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட 1704 பேர், 28 பேரிடர் மீட்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X