என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
டெல்லியில் பிரதமர் மோடியுடன் கவர்னர் சந்திப்பு
Byமாலை மலர்9 Aug 2019 8:04 AM GMT (Updated: 9 Aug 2019 8:04 AM GMT)
டெல்லியில் இன்று காலை பிரதமர் நரேந்திர மோடியை கவர்னர் பன்வாரிலால் புரோகித் சந்தித்து பேசினார்.
சென்னை:
தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் நேற்று முன்தினம் திடீரென டெல்லி புறப்பட்டுச் சென்றிருந்தார்.
முன்னாள் மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜ் மரணம் அடைந்ததை தொடர்ந்து அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். அதன் பிறகு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார்.
இன்று காலையில் பிரதமர் நரேந்திர மோடியை கவர்னர் பன்வாரிலால் புரோகித் சந்தித்து பேசினார். தமிழகத்தில் நிலவும் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை, அரசியல் நிலவரம் குறித்தும் அவர் விளக்கினார்.
காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதால் தமிழகத்தில் அசம்பாவிதத்தை தவிர்க்க செய்யப்பட்டிருந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் விவரித்தார்.
இன்று மாலை உள்துறை மந்திரி அமித்ஷாவையும் சந்திக்க கவர்னர் நேரம் கேட்டுள்ளார். அனுமதி கிடைத்ததும் அவரிடமும் விரிவாக பேசுகிறார்.
அதன் பிறகு கவர்னர் நாளை சென்னை திரும்புகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X