என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
Byமாலை மலர்8 Aug 2019 5:58 PM GMT (Updated: 8 Aug 2019 5:58 PM GMT)
பர்கூரில் காவல்துறை சார்பில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தடுப்பு மற்றும் வன்முறை குறித்த விழப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
பர்கூர்:
பர்கூரில் காவல்துறை சார்பில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தடுப்பு மற்றும் வன்முறை குறித்த விழப்புணர்வு ஊர்வலம் நடந்தது. பர்கூர் பஸ் நிலையம் அருகிலிருந்து இந்த ஊர்வலத்தை துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த ஊர்வலம் ஜெகதேவி ரோடு, சின்னபர்கூர், மெயின் ரோடு, வாணியம்பாடி ரோடு வழியாக தாசில்தார் அலுவலகம் வரை சென்று நிறைவடைந்தது. இதில் பர்கூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள், வேளாங்கண்ணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள், கன்கார்டியா மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.
அப்போது, விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய தட்டிகளை ஏந்தியவாறும், விழிப்புணர்வு கோஷங்கள் எழுப்பியவாறும், விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வினியோகம் செய்தவாறும் மாணவ, மாணவிகள் சென்றனர். இதில், பர்கூர் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கற்பகம், பர்கூர் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர்கள் அமுதா, ரவிச்சந்திரன், அமரன் மற்றும் பள்ளிகளின் ஆசிரிய, ஆசிரியைகள் கலந்துகொண்டனர்.
பர்கூரில் காவல்துறை சார்பில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தடுப்பு மற்றும் வன்முறை குறித்த விழப்புணர்வு ஊர்வலம் நடந்தது. பர்கூர் பஸ் நிலையம் அருகிலிருந்து இந்த ஊர்வலத்தை துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த ஊர்வலம் ஜெகதேவி ரோடு, சின்னபர்கூர், மெயின் ரோடு, வாணியம்பாடி ரோடு வழியாக தாசில்தார் அலுவலகம் வரை சென்று நிறைவடைந்தது. இதில் பர்கூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள், வேளாங்கண்ணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள், கன்கார்டியா மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.
அப்போது, விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய தட்டிகளை ஏந்தியவாறும், விழிப்புணர்வு கோஷங்கள் எழுப்பியவாறும், விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வினியோகம் செய்தவாறும் மாணவ, மாணவிகள் சென்றனர். இதில், பர்கூர் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கற்பகம், பர்கூர் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர்கள் அமுதா, ரவிச்சந்திரன், அமரன் மற்றும் பள்ளிகளின் ஆசிரிய, ஆசிரியைகள் கலந்துகொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X