என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மதுரையில் டாக்டர் வீட்டில் புகுந்து 31 பவுன் நகை-பணம் கொள்ளை
Byமாலை மலர்8 Aug 2019 10:29 AM GMT (Updated: 8 Aug 2019 10:29 AM GMT)
மதுரையில் டாக்டர் வீட்டில் புகுந்து நகை, பணத்தை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
மதுரை:
மதுரை தபால்தந்தி நகர் பார்க் டவுன் பகுதியைச் சேர்ந்தவர் மேரி சுவர்ண லட்சுமி. இவரது கணவர் டாக்டர் பென் சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார்.
இதனால் மேரி சுவர்ணலட்சுமி மட்டும் தனியாக வசித்து வந்தார். சம்பவத்தன்று இவர் உறவினர்களை பார்ப்பதற்காக வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்று விட்டார்.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட மர்ம நபர்கள் நள்ளிரவு நேரத்தில் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் பீரோவை உடைத்து அதில் இருந்த 31 பவுன் நகை, வைர நெக்லஸ், ரூ.50 ஆயிரம் ரொக்கத்தை திருடிக் கொண்டு தப்பினர்.
ஊர் திரும்பிய மேரி சுவர்ணலட்சுமி பீரோவில் நகை-பணம் திருட்டு போயிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து புகாரின் பேரில் கூடல்புதூர் போலீ சார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். நகை-பணம் கொள்ளை போனது தொடர்பாக சிலர் மீது சந்தேகம் இருப்பதாக மேரி சுவர்ணலட்சுமி தெரிவித்தார். அதன் அடிப்படையில் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.
மதுரை தபால்தந்தி நகர் பார்க் டவுன் பகுதியைச் சேர்ந்தவர் மேரி சுவர்ண லட்சுமி. இவரது கணவர் டாக்டர் பென் சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார்.
இதனால் மேரி சுவர்ணலட்சுமி மட்டும் தனியாக வசித்து வந்தார். சம்பவத்தன்று இவர் உறவினர்களை பார்ப்பதற்காக வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்று விட்டார்.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட மர்ம நபர்கள் நள்ளிரவு நேரத்தில் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் பீரோவை உடைத்து அதில் இருந்த 31 பவுன் நகை, வைர நெக்லஸ், ரூ.50 ஆயிரம் ரொக்கத்தை திருடிக் கொண்டு தப்பினர்.
ஊர் திரும்பிய மேரி சுவர்ணலட்சுமி பீரோவில் நகை-பணம் திருட்டு போயிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து புகாரின் பேரில் கூடல்புதூர் போலீ சார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். நகை-பணம் கொள்ளை போனது தொடர்பாக சிலர் மீது சந்தேகம் இருப்பதாக மேரி சுவர்ணலட்சுமி தெரிவித்தார். அதன் அடிப்படையில் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X