search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கூட்டம்
    X
    கூட்டம்

    குடிநீர் வாரிய குறைதீர் கூட்டம் 10-ந்தேதி நடக்கிறது

    சென்னை குடிநீர் வாரியம் சார்பில் திறந்த வெளி கூட்டம் வருகிற சனிக்கிழமை காலை 10 மணி முதல் மதியம் ஒரு மணி வரை அனைத்து பகுதி அலுவலகங்களிலும் நடைபெறுகிறது.
    சென்னை:

    சென்னை குடிநீர் வாரியம் சார்பில் திறந்த வெளி கூட்டம் மாதந்தோறும் 2-வது சனிக்கிழமை நடந்து வருகிறது. இந்த மாதத்துக்கான கூட்டம் 10-ந்தேதி (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் ஒரு மணி வரை அனைத்து பகுதி அலுவலகங்களிலும் நடைபெறுகிறது.

    பொதுமக்கள் குடிநீர், கழிவுநீர் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள், குடிநீர், கழிவுநீர் வரி மற்றும் கட்டணங்கள் தொடர்பான சந்தேகங்களை நேரில் மனுக்கள் மூலம் தெரிவித்து பயன்பெறுமாறு குடிநீர் வாரியம் கேட்டுக்கொண்டுள்ளது.
    Next Story
    ×