search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து
    X
    விபத்து

    காரியாபட்டி அருகே விபத்து: சப்-இன்ஸ்பெக்டர்-போலீஸ்காரர் படுகாயம்

    காரியாபட்டி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் சப்-இன்ஸ்பெக்டர், போலீஸ்காரர் படுகாயம் அடைந்தனர்.

    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் வினோத்குமார் (வயது30), போலீஸ்காரர் கருப்பையா (25). இவர்கள் 2 பேரும் நேற்று இரவு காரியாபட்டி- அருப்புக்கோட்டை ரோட்டில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.

    அப்போது சாலையில் நின்றிருந்த வாகனத்தின் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் 2 பேரும் படுகாயம் அடைந்தனர்.

    விபத்தில் சிக்கிய வினோத்குமார், கருப்பையா ஆகிய 2 பேரும் மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த விபத்து குறித்து காரியாபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×