search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொள்ளை
    X
    கொள்ளை

    பாப்பிரெட்டிப்பட்டி அருகே வியாபாரி வீட்டில் ரூ.2 லட்சம் கொள்ளை

    தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே வியாபாரி வீட்டில் ரூ.2 லட்சம் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தர்மபுரி:

    தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியை அடுத்த மெனசி கிராமத்தை சேர்ந்தவர் கதிரேசன் (வயது 38). வியாபாரியான இவர் மெனசி கடை வீதியில் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் மற்றும் சிமெண்டு விற்பனை செய்யும் கடை நடத்தி வந்தார். இவரது கடைக்கு சற்று தள்ளி இவரது வீடு உள்ளது. கடையில் வசூலான பணம் 2 லட்சத்தை வீட்டு பீரோவில் வைத்துவிட்டு இவரும், இவரது தாயாரும் விவசாய நிலத்தில் புதிதாக கட்டப்படும் வீட்டை பார்க்க சென்றனர்.

    பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டும், பீரோவும் உடைக்கப்பட்டு இருந்தது. பீரோவில் இருந்த ரூ. 2 லட்சம் மற்றும் 5 பவுன் நகைகள் கொள்ளை போயிருந்தது.

    இதுகுறித்து அவர் பாப்பிரெட்டிப்பட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள். கொள்ளை நடந்த வீட்டிற்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. கைரேகை நிபுணர்களும் வந்து கொள்ளையர்களின் கைரேகை பதிவாகி உள்ளதா? என்று ஆய்வு செய்து வருகின்றனர்.
    Next Story
    ×