search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மின்சாரம் நிறுத்தம்
    X
    மின்சாரம் நிறுத்தம்

    உசிலம்பட்டி, மொண்டிக்குண்டுவில் நாளை மின்தடை

    உசிலம்பட்டி, மொண்டிக்குண்டுவில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகளை மின்வாரியம் அறிவித்துள்ளது.

    மதுரை:

    மதுரை மாவட்டம், உசிலம்பட்டி, மொண்டிக்குண்டு துணை மின் நிலையத்தில் நாளை (8-ந் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே நாளை காலை 9 மணி முதல் 2 மணி வரை உசிலம்பட்டி துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட உசிலம்பட்டி நகர், நக்கலப்பட்டி, தொட்டப்பநாயக்கனூர், மேக்கிலார்பட்டி, கீரிப்பட்டி, சிந்துப்பட்டி, தும்மக்குண்டு, வேப்பனூத்து, பூதிப்புரம், வடுகப்பட்டி, போத்தம்பட்டி ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

    இதே போல் மொண்டிக்குண்டு துணை மின் நிலையத்திற்குட்பட்ட உத்தப்ப நாயக்கனூர், உ.வாடிப்பட்டி, குளத்துப் பட்டி, கல்யாணிப்பட்டி, கல்லூத்து, எரவார்பட்டி, மொண்டிக்குண்டு, பாப்பாபட்டி, கொப்பிலிப்பட்டி, வெள்ளைமலைப்பட்டி, வையம்பட்டி, லிங்கப்பநாயக்கனூர், புதுக்கோட்டை, சீமானூத்து, துரைச்சாமிபுரம் புதூர் மற்றும் அதனைச் சார்ந்த பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

    மேற்கண்ட தகவலை உசிலம்பட்டி மின் பகிர்மான செயற்பொறியாளர் மணிமாறன் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×