search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    செயின் பறிப்பு
    X
    செயின் பறிப்பு

    திருவாரூர் அருகே பெண்ணிடம் நகை பறிப்பு

    திருவாரூர் அருகே மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் பெண்ணிடமிருந்து 6 பவுன் நகையை பறித்து சென்றது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருவாரூர்:

    நாகை வெளி பாளையத்தை சேர்ந்தவர் வகாபுதீன். இவரது மனைவி நஜிமுனிஷா (வயது 50) கணவனும், மனைவியும் திருவாரூருக்கு மோட்டார் சைக்கிளில் வந்து விட்டு இரவு ஊருக்கு புறப்பட்டனர்.

    அவர்கள் திருவாரூரை அடுத்த கடாரம் கொண்டான் திரு.வி.க. கல்லூரி அருகில் சென்ற போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 2பேர் திடீரென நஜிமுனிஷா அணிந்திருந்த 6 பவுன் செயினை பறித்துகொண்டு தப்பி சென்று விட்டனர்.

    இது பற்றிய புகாரின் பேரில் திருவாரூர் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் கணபதி வழக்குப்பதிவு செய்து பெண்ணிடம் நகை பறித்த கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
    Next Story
    ×