என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காரைக்காலில் சிறுமியை காரில் கடத்தி பாலியல் தொல்லை - போக்சோ சட்டத்தில் 2 பேர் கைது
Byமாலை மலர்6 Aug 2019 10:36 AM GMT (Updated: 6 Aug 2019 10:36 AM GMT)
காரைக்காலில் சிறுமியை காரில் கடத்தி பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பாக போக்சோ சட்டத்தில் 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காரைக்கால்:
காரைக்கால் பிள்ளைதெருவாசல் பகுதியை சேர்ந்தவர் ராணி. இவரது 13 வயது மகளை கோட்டுச்சேரியை சேர்ந்த கலையமுது (வயது27) என்பவர் ஆசைவார்த்தை கூறி காரில் சென்னைக்கு கடத்தி சென்றார். அங்கு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார்.
தனது மகள் காணாமல் போனது குறித்து ராணி காரைக்கால் டவுன் போலீசில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் ஏழுமைலை தலைமையிலான போலீசார் வழக்குபதிவு செய்து சிறுமியை கடத்திய கலையமுதுவை தேடி வந்தனர்.
இதனிடையே செல்போன் மூலம் துப்பு துலக்கப்பட்டதில் சிறுமியை கலையமுது திருவள்ளூர் பட்டாபிராமன் நகரில் கடத்தி வைத்து இருப்பது தெரிய வந்தது. உடனே போலீசார் அங்கு விரைந்து சென்று சிறுமியை மீட்டனர். பின்னர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கலையமுதுவை கைது செய்தனர்.
கலையமுதுவுக்கு உடந்தையாக இருந்ததாக அவரது நண்பர் சுரேஷ் என்பவரும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். இவர்களிடம் இருந்து காரும் பறிமுதல் செய்யப்பட்டது.
காரைக்கால் பிள்ளைதெருவாசல் பகுதியை சேர்ந்தவர் ராணி. இவரது 13 வயது மகளை கோட்டுச்சேரியை சேர்ந்த கலையமுது (வயது27) என்பவர் ஆசைவார்த்தை கூறி காரில் சென்னைக்கு கடத்தி சென்றார். அங்கு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார்.
தனது மகள் காணாமல் போனது குறித்து ராணி காரைக்கால் டவுன் போலீசில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் ஏழுமைலை தலைமையிலான போலீசார் வழக்குபதிவு செய்து சிறுமியை கடத்திய கலையமுதுவை தேடி வந்தனர்.
இதனிடையே செல்போன் மூலம் துப்பு துலக்கப்பட்டதில் சிறுமியை கலையமுது திருவள்ளூர் பட்டாபிராமன் நகரில் கடத்தி வைத்து இருப்பது தெரிய வந்தது. உடனே போலீசார் அங்கு விரைந்து சென்று சிறுமியை மீட்டனர். பின்னர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கலையமுதுவை கைது செய்தனர்.
கலையமுதுவுக்கு உடந்தையாக இருந்ததாக அவரது நண்பர் சுரேஷ் என்பவரும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். இவர்களிடம் இருந்து காரும் பறிமுதல் செய்யப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X