என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காஷ்மீர் தனி அந்தஸ்து ரத்து- கவர்னர் மாளிகையில் முற்றுகை போராட்டம்
Byமாலை மலர்6 Aug 2019 10:02 AM GMT (Updated: 6 Aug 2019 10:02 AM GMT)
காஷ்மீர் மாநிலத்துக்கான தனி அதிகாரம் ரத்து செய்யப்பட்டதை கண்டிக்கும் வகையில் சென்னையில் இன்று போராட்டம் நடைபெற்றது.
சென்னை:
காஷ்மீர் மாநிலத்துக்கான தனி அதிகாரம் ரத்து செய்யப்பட்டதை கண்டிக்கும் வகையில் சென்னையில் இன்று போராட்டம் நடைபெற்றது.
மனித நேய ஜனநாயக கட்சி எம்.எல்.ஏ. தமிமும் அன்சாரி, த.மு.மு.க. பொதுச் செயலாளர் ஹைதர் அலி மற்றும் சுப.வீரபாண்டியன், எஸ்றா சற்குணம் உள்ளிட்டோரும், பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்களும் இன்று காலை கவர்னர் மாளிகையை முற்றுகையிட சென்றனர்.
இதற்காக சின்னமலை அருகே நூற்றுக்கணக்கானோர் திரண்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கவர்னர் மாளிகை அருகில் சென்று விடக் கூடாது என்பதற்காக பாதுகாப்புக்கு போலீசார் நிறுத்தப்பட்டிருந்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். பின்னர் அனைவரும் கைது செய்யப்பட்டனர். சுமார் 300 பேர் வரை கைதானதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. கைது செய்யப்பட்டவர்கள் அருகில் உள்ள சமூகநலக்கூடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
காஷ்மீர் மாநிலத்துக்கான தனி அதிகாரம் ரத்து செய்யப்பட்டதை கண்டிக்கும் வகையில் சென்னையில் இன்று போராட்டம் நடைபெற்றது.
மனித நேய ஜனநாயக கட்சி எம்.எல்.ஏ. தமிமும் அன்சாரி, த.மு.மு.க. பொதுச் செயலாளர் ஹைதர் அலி மற்றும் சுப.வீரபாண்டியன், எஸ்றா சற்குணம் உள்ளிட்டோரும், பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்களும் இன்று காலை கவர்னர் மாளிகையை முற்றுகையிட சென்றனர்.
இதற்காக சின்னமலை அருகே நூற்றுக்கணக்கானோர் திரண்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கவர்னர் மாளிகை அருகில் சென்று விடக் கூடாது என்பதற்காக பாதுகாப்புக்கு போலீசார் நிறுத்தப்பட்டிருந்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். பின்னர் அனைவரும் கைது செய்யப்பட்டனர். சுமார் 300 பேர் வரை கைதானதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. கைது செய்யப்பட்டவர்கள் அருகில் உள்ள சமூகநலக்கூடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X