என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
புறா பிடிக்க சென்ற போது மின்சாரம் தாக்கி பிளஸ்-2 மாணவர் பலி
கோவை:
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பெருமாள் லே-அவுட்டை சேர்ந்தவர் சகாயராஜ். டிரைவர். இவரது மகன் ஜோசப் (வயது 17). இவர் காரமடையில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.
சம்பவத்தன்று பள்ளி முடிந்து வீட்டுக்கு திரும்பிய ஜோசப் விளையாடுவதற்காக வெளியே சென்றார். அப்போது அந்த பகுதியில் உள்ள ஆலயத்தில் புறா இருப்பதை பார்த்தார். அந்த புறாவை பிடிப்பதற்காக எந்த ஒரு பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல் ஆலய மேற்கூறை மீது ஏறினார்.
அப்போது அந்த வழியாக சென்ற மின்சார வயரை ஜோசப் தொட்டார். கண்இமைக்கும் நேரத்தில் மின்சாரம் தாக்கி தூக்கி வீசியது.
இதில் அவர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக ஜோசப்பை மீட்டு கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் ஜோசப் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்