என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
பொன்னேரியில் 3 கடைகளில் பூட்டை உடைத்து கொள்ளை
பொன்னேரி:
பொன்னேரியை அடுத்த தடப்பெரும்பாக்கத்தை சேர்ந்தவர் ஆண்டியப்பன் (வயது 39).
இவர் மீஞ்சூர் சாலையில் பர்னிச்சர் கடை நடத்தி வருகிறார். வழக்கம் போல நேற்று இரவு கடையை அடைத்து விட்டு சென்றார். இன்று அதிகாலை மர்ம நபர்கள் 3 பேர் முகத்தை துணியால் மறைத்துக் கொண்டு கடையின் பூட்டை கடப்பாறையால் உடைத்து உள்ளே சென்றுள்ளனர்.
கடையில் இருந்த ரூ.7 ஆயிரம் ரொக்கம், ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள வெளி நாட்டு பணம் மற்றும் டிவி., வெள்ளி நாணயங்கள், பித்தளை பொருட்களை கொள்ளைடித்து சென்றுள்ளனர்.
இதேபோல மீஞ்சூரை அடுத்த ஞாயிறு பகுதியில் ஆயில் கடையிலும் பூட்டை உடைத்து ரூ.15 ஆயிரத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துள்ளனர்.
இதன் அருகே மண்ணார் (40) என்பவரின் கடையில் இருந்து டிரில்லிங் எந்திரத்தை திருடி சென்றுள்ளனர். இந்த 3 சம்பவங்களிலும் ஒரே கும்பல் ஈடுபட்டிருக்கலாம் என தெரிகிறது.
இதுகுறித்து புகாரின் பேரில் பொன்னேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இப்பகுதியை சேர்ந்த வியாபாரிகள் கூறுகையில், “கடந்த சில நாட்களாக இப்பகுதியில் வழிப்பறி, கொள்ளை, திருட்டு போன்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. போலீசார் ரோந்து வருவது கிடையாது என குற்றம் சாட்டினர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்