search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    விருதுநகர் அருகே மோட்டார் சைக்கிள் திருடன் கைது

    விருதுநகர் அருகே மோட்டார் சைக்கிள் திருடன் போலீசாரின் வாகன சோதனையில் சிக்கினான்.

    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டம் ஆர்.ஆர்.நகர் பகுதியில் வச்சக்காரபட்டி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு வாலிபர் மோட்டார் சைக்கிளில் வந்தார். அவர், வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசாரை கண்டதும் மோட்டார் சைக்கிளை திருப்பிக் கொண்டு வேகமாகச் சென் றார்.

    இதனைத் தொடர்ந்து போலீசார் விரட்டிச்சென்று மோட்டார் சைக்கிளில் வந்த ஆசாமியை பிடித்தனர். அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர்.

    அப்போது அவனது பெயர் மாரியப்பன் (வயது 29) என்பதும், தூத்துக்குடி அழகேசபுரத்தைச் சேர்ந் தவன் என்பதும் தெரிய வந்தது. அவன் வந்த மோட்டார் சைக்கிள் தூத்துக்குடியில் திருடியது என தெரிவித்தான். மேலும் அவன் கொடுத்த தகவலின் பேரில் ஆர்.ஆர். நகர் ரெயில் நிலைய பகுதியில் பதுக்கி வைத்திருந்த 2 மோட்டார் சைக்கிள்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

    தொடர்ந்து போலீசார் மாரியப்பனை கைது செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.

    Next Story
    ×