search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    செம்மரக்கட்டைகள் பறிமுதல்
    X
    செம்மரக்கட்டைகள் பறிமுதல்

    ஊத்துக்கோட்டை அருகே காரில் செம்மரக்கட்டை கடத்தல்- டிரைவர் கைது

    ஊத்துக்கோட்டை அருகே காரில் செம்மரக்கட்டை கடத்தலில் ஈடுபட்ட டிரைவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஊத்துக்கோட்டை:

    பென்னாலூர்பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் அழகேசன், தனிபிரிவு போலீஸ் சேகர், ஏட்டு விஜயன் ஆகியோர் அம்மம்பாக்கம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஆந்திராவிலிருந்து வந்த கார் ஒன்று போலீசாரை கண்டதும் நிற்காமல் சென்றது. இதையடுத்து போலீசார் சுமார் 1 கிலோ தூரம் வரை விரட்டி சென்று காரை மடிக்கினர். தப்பி ஓட முயன்ற டிரைவரை பிடித்தனர்.

    விசாரணையில் அவர் பென்னாலூர்பேட்டை தலையாரி தெருவை சேர்ந்த வெங்கடேசன் என்பது தெரிய வந்தது. காரில் சோதனை செய்த போது இருக்கையின் கீழ் 1 டன் எடை உள்ள ரூ. 5 மதிப்பிலான 13 செம்மரகட்டைகள் மறைத்து கடத்தி வந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து டிரைவர் வெங்கடேசனை போலீசார் கைது செய்து காருடன் செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்தனர். ஆந்திராவில் உள்ள காளாஸ்திரியிலிருந்து சென்னைக்கு செம்மரகட்டைகளை கடத்த முயன்றதாக டிரைவர் வெங்கடேசன் தெரிவித்து உள்ளார்.

    Next Story
    ×