என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
ஆண்டிப்பட்டி அருகே பெண்ணை தாக்கி மானபங்கம் செய்த கும்பல்
ஆண்டிப்பட்டி:
ஆண்டிப்பட்டி அருகே அய்யனார்புரத்தை சேர்ந்தவர் காளிதாஸ் (34). இவரது மனைவி லோகநாயகி. இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் லோகநாயகி கோபித்துக் கொண்டு அமச்சியாபுரத்தில் உள்ள தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.
மேலும் காளிதாஸ் குறித்து க.விலக்கு போலீசில் புகார் அளித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த காளிதாஸ் அவரது தாய் முனியம்மாள், உறவினர்கள் நாகஜோதி, ராஜ்குமார் ஆகியோர் லோகநாயகி வீட்டிற்கு சென்று அவரை தாக்கி சேலையை பிடித்து இழுத்து மானபங்கம் செய்துள்ளனர்.
இதேபோல் லோகநாயகி அவரது உறவினர்கள் அறிவானந்தம், காமாட்சி, சோனை, ராஜ்குமார், முத்துலட்சுமி ஆகியோர் காளிதாசை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இது குறித்து காளிதாஸ் அளித்த புகாரின் பேரில் போலீசார் 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். லோகநாயகி அளித்த புகாரின் பேரில் 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்