என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
கொல்லங்கோட்டில் தனக்கு தானே கழுத்தை அறுத்து வாலிபர் தற்கொலை
நாகர்கோவில்:
கொல்லங்கோடு அருகே சங்குருட்டி முல்லைச்சேரி பகுதியை சேர்ந்தவர் ரவி (வயது 52). ஐஸ் வியாபாரி.
இவரது முதல் மனைவி இறந்துவிட்டார். இதையடுத்து சிந்து என்ற பெண்ணை 2-வது திருமணம் செய்து கொண்டார். கடந்த சில நாட்களாக சிந்துவும் உடல்நலம் பாதிக்கப்பட்டு திருவனந்தபுரத்தில் உள்ள ஆசிரமம் ஒன்றில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார்.
ரவிக்கு குடி பழக்கம் இருந்து வந்தது. மது பழக்கத்தை கைவிடுவதற்காக சிகிச்சை பெற்று வந்த ரவி கடந்த சில நாட்களாக மனமுடைந்து காணப்பட்டார். நேற்று ரவி பக்கத்தில் உள்ள அவரது சகோதரர் வீட்டிற்கு சென்றார். அங்கு கழுத்தை அறுத்த நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.
இதைப்பார்த்த அவரது சகோதரர் கொல்லங்கோடு போலீசுக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணமாக கிடந்த ரவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப் பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ரவி சாவுகுறித்து விசாரணை நடத்தினார்கள்.
விசாரணையில் ரவி தனக்குதானே கழுத்தை அறுத்து தற்கொலை செய் திருப்பது தெரிய வந்துள்ளது. போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு உள்ளனர். தற்கொலை செய்துகொண்ட ரவியின் உடல் பிரேத பரி சோதனை இன்று ஆசாரிப் பள்ளம் ஆஸ்பத்திரியில் நடக்கிறது. இதையடுத்து அவரது உறவினர்கள் ஏராளமானோர் அங்கு திரண்டிருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்