search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாணவ, மாணவிகள் பஸ்சை சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்ட காட்சி
    X
    மாணவ, மாணவிகள் பஸ்சை சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்ட காட்சி

    திருவண்ணாமலையில் அரசு பஸ்சை சிறை பிடித்து மாணவர்கள் போராட்டம்

    திருவண்ணாமலையில் இருந்து செங்கம் சென்ற பஸ்சை மாணவ, மாணவிகள் கல்லூரி முன்பு சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை - செங்கம் சாலையில் அரசு கலைக்கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் திருவண்ணாமலை, செங்கம், தண்டராம்பட்டு, கீழ்பென்னாத்தூர் உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். செங்கம் பகுதியில் இருந்து வரும் மாணவர்கள் வழக்கமாக மதியம் 12.30 மணிக்கு திருவண்ணாமலையில் இருந்து செங்கத்துக்கு பஸ்சில் செல்கின்றனர். இந்த பஸ் கடந்த 3 நாட்களாக சரிவர இயக்கப்பட வில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த மாணவ, மாணவிகள் நேற்று மதியம் 1.30 மணியளவில் திருவண்ணாமலையில் இருந்து செங்கம் சென்ற பஸ்சை கல்லூரி முன்பு சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த திருவண்ணாமலை துணை போலீஸ் சூப்பிரண்டு அண்ணாதுரை மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ, மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். சுமார் அரை மணி நேரத்திற்கு மேல் இந்த போராட்டம் நடந்ததால் பஸ்சில் இருந்த பயணிகள் அவதி அடைந்தனர்.

    இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 
    Next Story
    ×