search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    கோவை அருகே மனைவியுடன் தகராறு - தொழிலாளி தற்கொலை

    கோவை அருகே மனைவியுடன் தகராறில் தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை:

    கோவை ஆண்டிபாளையம் காந்தி தெருவை சேர்ந்தவர் சிவகுமார் (வயது 29) கூலித்தொழிலாளி. இவரது மனைவி பிரியா (வயது 29). சிவகுமார் வேலைக்கு சென்று வீட்டு குடும்ப செலவுக்காக மனைவியிடம் பணம் கொடுக்காமல் மது குடித்து வந்துள்ளார்.

    இதனால் கணவன் -மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. சம்பவத்தன்று மது குடித்துவிட்டு வந்த சிவகுமார் மனைவி பிரியாவிடம் தகராறில் ஈடுபட்டார். இதனால் ஏற்பட்ட மனவேதனையில் சிவகுமார் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து வடவள்ளி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×