என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருப்பூரில் மனைவியின் கள்ளக்காதல் தெரிந்ததால் லாரி டிரைவர் தற்கொலை
Byமாலை மலர்3 Aug 2019 9:00 AM GMT (Updated: 3 Aug 2019 9:00 AM GMT)
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் மனைவியின் கள்ளக்காதல் தெரிந்ததால் மனமுடைந்த லாரி டிரைவர் லாட்ஜில் தற்கொலை செய்து கொண்டார்.
திருப்பூர்:
நாமக்கல்லை சேர்ந்தவர் ராஜா (வயது 39). போர்வெல் லாரி டிரைவர். இவரது மனைவி ஜானகி (29). காதல் திருமணம் செய்த இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். திருப்பூர் தாராபுரம் ரோட்டில் வசித்து வந்தனர்.
இந்நிலையில் கடந்த 1 வருடத்துக்கு முன்பு கணவன்- மனைவிக்கு இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டது. இதனால் மனைவியை பிரிந்த ராஜா பவானியில் தங்கியிருந்தார். இந்நிலையில் இவர்களது உறவினர் பேச்சுவார்த்தை நடத்தி மீண்டும் சேர்ந்து வாழ வைக்க முடிவு செய்தனர். பேச்சுவார்த்தை நடந்தபோது ராஜா திருப்பூர் வந்து மனைவியிடம் பேசினார்.
அப்போது மனைவிக்கும் அதே பகுதியில் உள்ள ஒரு வாலிபருக்கும் இடையே கள்ளக்காதல் இருப்பதை தெரிந்து அதிர்ச்சியடைந்தார். விரக்தியடைந்த அவர் பல்லடம் ரோட்டில் உள்ள ஒரு லாட்ஜில் தங்கினார்.
நேற்று வெகுநேரமாகியும் அவர் கதவை திறக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த ஊழியர்கள் ஜன்னல் மூலம் பார்த்தபோது அவர் தூக்கில் தொங்கினார். இது குறித்து ஊழியர்கள் திருப்பூர் தெற்கு போலீசில் புகார் செய்தனர்.
போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது போர்வையால் அவர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. ராஜாவின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நாமக்கல்லை சேர்ந்தவர் ராஜா (வயது 39). போர்வெல் லாரி டிரைவர். இவரது மனைவி ஜானகி (29). காதல் திருமணம் செய்த இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். திருப்பூர் தாராபுரம் ரோட்டில் வசித்து வந்தனர்.
இந்நிலையில் கடந்த 1 வருடத்துக்கு முன்பு கணவன்- மனைவிக்கு இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டது. இதனால் மனைவியை பிரிந்த ராஜா பவானியில் தங்கியிருந்தார். இந்நிலையில் இவர்களது உறவினர் பேச்சுவார்த்தை நடத்தி மீண்டும் சேர்ந்து வாழ வைக்க முடிவு செய்தனர். பேச்சுவார்த்தை நடந்தபோது ராஜா திருப்பூர் வந்து மனைவியிடம் பேசினார்.
அப்போது மனைவிக்கும் அதே பகுதியில் உள்ள ஒரு வாலிபருக்கும் இடையே கள்ளக்காதல் இருப்பதை தெரிந்து அதிர்ச்சியடைந்தார். விரக்தியடைந்த அவர் பல்லடம் ரோட்டில் உள்ள ஒரு லாட்ஜில் தங்கினார்.
நேற்று வெகுநேரமாகியும் அவர் கதவை திறக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த ஊழியர்கள் ஜன்னல் மூலம் பார்த்தபோது அவர் தூக்கில் தொங்கினார். இது குறித்து ஊழியர்கள் திருப்பூர் தெற்கு போலீசில் புகார் செய்தனர்.
போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது போர்வையால் அவர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. ராஜாவின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X