search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    திருப்பூரில் மனைவியின் கள்ளக்காதல் தெரிந்ததால் லாரி டிரைவர் தற்கொலை

    திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் மனைவியின் கள்ளக்காதல் தெரிந்ததால் மனமுடைந்த லாரி டிரைவர் லாட்ஜில் தற்கொலை செய்து கொண்டார்.
    திருப்பூர்:

    நாமக்கல்லை சேர்ந்தவர் ராஜா (வயது 39). போர்வெல் லாரி டிரைவர். இவரது மனைவி ஜானகி (29). காதல் திருமணம் செய்த இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். திருப்பூர் தாராபுரம் ரோட்டில் வசித்து வந்தனர்.

    இந்நிலையில் கடந்த 1 வருடத்துக்கு முன்பு கணவன்- மனைவிக்கு இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டது. இதனால் மனைவியை பிரிந்த ராஜா பவானியில் தங்கியிருந்தார். இந்நிலையில் இவர்களது உறவினர் பேச்சுவார்த்தை நடத்தி மீண்டும் சேர்ந்து வாழ வைக்க முடிவு செய்தனர். பேச்சுவார்த்தை நடந்தபோது ராஜா திருப்பூர் வந்து மனைவியிடம் பேசினார்.

    அப்போது மனைவிக்கும் அதே பகுதியில் உள்ள ஒரு வாலிபருக்கும் இடையே கள்ளக்காதல் இருப்பதை தெரிந்து அதிர்ச்சியடைந்தார். விரக்தியடைந்த அவர் பல்லடம் ரோட்டில் உள்ள ஒரு லாட்ஜில் தங்கினார்.

    நேற்று வெகுநேரமாகியும் அவர் கதவை திறக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த ஊழியர்கள் ஜன்னல் மூலம் பார்த்தபோது அவர் தூக்கில் தொங்கினார். இது குறித்து ஊழியர்கள் திருப்பூர் தெற்கு போலீசில் புகார் செய்தனர்.

    போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது போர்வையால் அவர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. ராஜாவின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×