என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வரத்து அதிகரிப்பால் விலை வீழ்ச்சி- வெளி மாநிலங்களுக்கு செல்லும் முருங்கைக்காய்கள்
Byமாலை மலர்3 Aug 2019 8:47 AM GMT (Updated: 3 Aug 2019 8:47 AM GMT)
அய்யலூர் அருகே கல்பட்டிசத்திரம் சந்தையில் இருந்து அதிக அளவில் முருங்கைக்காய் வெளி மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.
வடமதுரை:
திண்டுக்கல் மாவட்டம் எரியோடு, கோவிலூர், வடமதுரை, அய்யலூர் உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவு நாட்டு முருங்கை மற்றும் செடி முருங்கை சாகுபடி செய்யப்படுகிறது. இங்கிருந்து ஒட்டன்சத்திரம் மற்றும் கல்பட்டி சத்திரம் சந்தைக்கு விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.
அதிக அளவு கல்பட்டி சத்திரம் சந்தைக்கே வருகிறது. கடந்த 1 மாதத்துக்கும் மேலாக முருங்கை விலை அதிகரித்து காணப்பட்டது. ஒரு கிலோ ரூ.45 முதல் ரூ.50 வரை விவசாயிகளிடம் வாங்கி விற்பனை செய்யப்பட்டது. ஆடி மாதம் என்பதால் திண்டுக்கல் மற்றும் கோவில் திருவிழாக்களுக்காக முருங்கை அதிக அளவு வாங்கிச் செல்லப்பட்டது.
தற்போது முருங்கை வரத்து அதிகரித்துள்ளது. இதனால் விலையும் கிலோ ரூ.22 ஆக சரிந்துள்ளது. எனவே உள்ளூர் தேவைக்கு போக அதிக அளவு முருங்கைக்காய்கள் மும்பை, கொல்கத்தா, பெங்களூர் உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது.
வரத்து அதிகரித்துள்ள நிலையில் விலை கிடைக்காததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். இருந்தபோதும் வெளியூர் தேவைக்காக அதிக அளவில் அனுப்பும் பணியில் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் எரியோடு, கோவிலூர், வடமதுரை, அய்யலூர் உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவு நாட்டு முருங்கை மற்றும் செடி முருங்கை சாகுபடி செய்யப்படுகிறது. இங்கிருந்து ஒட்டன்சத்திரம் மற்றும் கல்பட்டி சத்திரம் சந்தைக்கு விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.
அதிக அளவு கல்பட்டி சத்திரம் சந்தைக்கே வருகிறது. கடந்த 1 மாதத்துக்கும் மேலாக முருங்கை விலை அதிகரித்து காணப்பட்டது. ஒரு கிலோ ரூ.45 முதல் ரூ.50 வரை விவசாயிகளிடம் வாங்கி விற்பனை செய்யப்பட்டது. ஆடி மாதம் என்பதால் திண்டுக்கல் மற்றும் கோவில் திருவிழாக்களுக்காக முருங்கை அதிக அளவு வாங்கிச் செல்லப்பட்டது.
தற்போது முருங்கை வரத்து அதிகரித்துள்ளது. இதனால் விலையும் கிலோ ரூ.22 ஆக சரிந்துள்ளது. எனவே உள்ளூர் தேவைக்கு போக அதிக அளவு முருங்கைக்காய்கள் மும்பை, கொல்கத்தா, பெங்களூர் உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது.
வரத்து அதிகரித்துள்ள நிலையில் விலை கிடைக்காததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். இருந்தபோதும் வெளியூர் தேவைக்காக அதிக அளவில் அனுப்பும் பணியில் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X