search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    செயின் பறிப்பு
    X
    செயின் பறிப்பு

    குழந்தைகளுடன் பைக்கில் சென்ற பள்ளி ஆசிரியையிடம் 3 பவுன் நகை பறிப்பு

    குழந்தைகளுடன் பைக்கில் சென்ற பள்ளி ஆசிரியையிடம் 3 பவுன் நகையை பறித்துச் சென்ற மர்ம மனிதர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
    மதுரை:

    மதுரை செக்கானூரணியை அடுத்த சத்தியானந்த புரத்தைச் சேர்ந்த பால் பாண்டி மனைவி சுகுணா (வயது 32). இவர் அங்குள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார்.

    இந்த நிலையில் சுகுணா நேற்று குழந்தைகளுடன் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டு இருந்தார்.

    அப்போது தேனி- மதுரை ரோட்டில் மூணாண்டிப்பட்டி அருகே மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் சுகுணா கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்கச்சங்கிலியை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச் சென்று விட்டனர்.

    இது தொடர்பாக சுகுணா செக்கானூரணி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் வனிதா வழக்குப்பதிவு செய்து செயின் பறிப்பு கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகிறார்.
    Next Story
    ×