search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    பொம்மிடியில் பூச்சி மருந்து குடித்து பேக்கரி ஊழியர் தற்கொலை

    பொம்மிடியில் பெற்றோரிடம் தகராறில் ஈடுபட்ட பேக்கரி கடை ஊழியர் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம், பொம்மிடி பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் கவுதமன் (வயது24). இவர் பேக்கரி கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

    இந்த நிலையில் கவுதமன் வீட்டின் தனது பெற்றோரிடம் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்து காணப்பட்ட கவுதமன் வீட்டில் பூச்சி மருந்தை குடித்தார். இதனை பார்த்த குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்றிரவு கவுதமன் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து பொம்மிடி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×