என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நீட் விலக்கு மசோதா விவகாரம்- தமிழக அரசுக்கு ஐகோர்ட் சரமாரி கேள்வி
Byமாலை மலர்1 Aug 2019 11:28 AM GMT (Updated: 1 Aug 2019 11:28 AM GMT)
நீட் விலக்கு மசோதா திருப்பி அனுப்பப்பட்ட தகவலை 2 ஆண்டுகளாக வெளியிடாதது ஏன்? என்று தமிழக அரசுக்கு ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது.
சென்னை:
நீட் விலக்கு மசோதாக்களுக்கு குடியரசு தலைவரின் ஒப்புதலை பெறக்கோரி பிரின்ஸ் கஜேந்திர பாபு என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள், நீட் விலக்கு மசோதா திருப்பி அனுப்பப்பட்ட தகவலை 2 ஆண்டுகளாக வெளியிடாதது ஏன்? நீட் விலக்கு பற்றி மக்கள் பரவலாக பேசி வந்த நிலையில் அரசு மவுனம் காத்தது ஏன்? மசோதா நிராகரிக்கப்பட்டால் புதிய மசோதா நிறைவேற்ற விதிகள் இருந்து அரசு நடவடிக்கை எடுக்காதது ஏன்? நீட் விலக்கு மசோதாக்களை திரும்ப பெற்றுக்கொண்ட அரசு என்னென்ன நடவடிக்கை எடுத்துள்ளது? இதுகுறித்து தமிழக அரசு ஆகஸ்ட் 8-ம் தேதிக்குள் ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர்.
2017 செப்.22ல் திருப்பி அனுப்பிய மசோதாவை 3 நாளில் அரசு பெற்றதற்கு சான்றொப்பம் உள்ளதாக மத்திய அரசு சார்பில் வாதிடப்பட்டது.
கடிதம் பெற்றுக்கொண்டதை இதுவரை எந்த தளத்திலோ, யாரிடமோ அல்லது நீதிமன்றத்திலோ ஏன் கூறவில்லை? நீட்விலக்கு மசோதா நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்பது திருப்பி அனுப்பியது என்றுதான் அர்த்தம். மாநில அரசு மீண்டும் 6 மாதத்தில் மசோதா அனுப்பினால் குடியரசுத் தலைவர் பரிசீலிக்கலாம் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
நீட் விலக்கு மசோதாக்களுக்கு குடியரசு தலைவரின் ஒப்புதலை பெறக்கோரி பிரின்ஸ் கஜேந்திர பாபு என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள், நீட் விலக்கு மசோதா திருப்பி அனுப்பப்பட்ட தகவலை 2 ஆண்டுகளாக வெளியிடாதது ஏன்? நீட் விலக்கு பற்றி மக்கள் பரவலாக பேசி வந்த நிலையில் அரசு மவுனம் காத்தது ஏன்? மசோதா நிராகரிக்கப்பட்டால் புதிய மசோதா நிறைவேற்ற விதிகள் இருந்து அரசு நடவடிக்கை எடுக்காதது ஏன்? நீட் விலக்கு மசோதாக்களை திரும்ப பெற்றுக்கொண்ட அரசு என்னென்ன நடவடிக்கை எடுத்துள்ளது? இதுகுறித்து தமிழக அரசு ஆகஸ்ட் 8-ம் தேதிக்குள் ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர்.
கடிதம் பெற்றுக்கொண்டதை இதுவரை எந்த தளத்திலோ, யாரிடமோ அல்லது நீதிமன்றத்திலோ ஏன் கூறவில்லை? நீட்விலக்கு மசோதா நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்பது திருப்பி அனுப்பியது என்றுதான் அர்த்தம். மாநில அரசு மீண்டும் 6 மாதத்தில் மசோதா அனுப்பினால் குடியரசுத் தலைவர் பரிசீலிக்கலாம் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X