search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொலை மிரட்டல்
    X
    கொலை மிரட்டல்

    சாத்தான்குளத்தில் முதியவரை தாக்கி கொலை மிரட்டல்- பெண்ணுக்கு வலைவீச்சு

    சாத்தான்குளத்தில் முதியவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த பெண்ணை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
    சாத்தான்குளம்:

    சாத்தான்குளம் அருகே உள்ள கீழபனைகுளம் வடக்கு தெருவை சேர்ந்தவர் தாவீது (வயது 75). இதே பகுதியை சேர்ந்தவர் சுவாமி அடியான் மனைவி ஜெபஜெயா. இன்று காலை தாவீது தோட்டத்திற்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த ஜெபஜெயாவுக்கும், தாவீதுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. 

    வாக்குவாதம் முற்றவே ஆத்திரமடைந்த ஜெபஜெயா கல்லால் தாவீதை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்து விட்டு சென்று விட்டார். இதில் பலத்த காயமடைந்த தாவீது சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

    இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெபஜெயாவை வலைவீசி தேடி வருகின்றனர்.
    Next Story
    ×